கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி வருவதால், இதுவரை ஏராளமானோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சாலை, பாலம், ரெயில் தண்டவாளம், மின் கம்பங்கள் சேதமடைந்தன. அணைகள் திறப்பால் நீர் ஆர்பரித்து எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.