ஆங்கில புத்தாண்டு 2018 வரவேற்கும் விதமாக பொதுமக்கள் உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து சென்னை, தில்லி உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. மேலும் இளைஞர்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்களுடன் கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.