தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் ரயில் நிலையங்களில் விடிய விடிய பயணிகள் கூட்டம் அலைமோதியது. சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்யாத பயணிகள் நீண்டவரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்கினர். மேலும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தடுக்க ரயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது.