கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடியது. சில இடங்களில் மரங்கள் விழுந்தன. கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளில் நீரில்மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்கள் போக்குவரத்து தாமதமாகியுள்ளது.