உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடதிதில் தனது மகளுடன் வந்த நடிகை கவுதமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு பேட்டி அளித்த கவுதமி, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை ரஜினி, கமலால் உடனடியாக நிரப்பிவிட முடியாது என்றார்.