பார்க்லேண்ட் பள்ளியில் நடைபெற்ற மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பென்சிவேனியா அவென்யுவில் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் தன்னெழுச்சி போராட்டமாக திரண்டு, துப்பாக்கி வன்முறை கலாசாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணியாக சென்று கோஷங்கள் எழுப்பினர்.