சென்னை போரூர் அருகே அமைந்துள்ள தனியார் கால் டாக்ஸி நிறுவனத்திற்கு சொந்தமான கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200க்கு மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமானது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்து வந்த தீயை கடுமைாயாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.