உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி, ஆரவாரத்துடன் 2019 ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். சென்னை மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இளைஞர்கள் நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.