பொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து உள்ளிட்ட பல்வேறு படையல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்து உள்ளது. காய்கறி, மஞ்சள் போன்றவற்றின் விலை அதிகம் இருந்தாலும், பண்டிகை என்பதால், மக்கள் விலையை கருத்தில் கொள்ளாமல், வாங்கிச்செல்கின்றனர்.