தமிழகம் முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள உள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னை முன்னிலையில் உள்ளது. நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் வறண்டு போனது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.