கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவ விருதான “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” எனும் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு இந்த விருதை வழங்கினர். அப்போது, ‘என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ என விழா மேடையில் தமிழில் ரஜினிகாந்த் பேசினார்.