காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை சிறப்பாக நடத்தியதற்காக, காவல் துறை தலைமை இயக்குநர் முதல் காவல் நிலையிலான அலுவலர்கள் வரை அத்திவரதர் திருவிழாப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதிக்கு அருள்மிகு அத்திவரதர் சிறப்புப் பணிக்கான பதக்கம் வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள்.