தமிழக அரசு அறிவித்துள்ள, பொங்கல் பரிசான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உடன் ரூ.1,000 இன்று முதல், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வினியோகம் வழங்கப்படுகிறது. மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13ஆம் தேதி பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.