சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் பழைய பொருட்கள் எரித்ததால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அதிகாலை முதல் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் மற்றும் புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தனர். பனிமூட்டத்துடன் இந்த புகையும் சேர்ந்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.