சாதனைகளை பெண்களுக்கு சக்தி விருது வழங்கி கெளரவிப்பு
பல்வேறு துறைகளில் சேவையாற்றி வரும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் பெண்கள் சக்தி விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் விவசாயம், விளையாட்டு, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ராணுவம், கல்வி ஆகிய துறைகளில் பங்களிப்பு செலுத்திய 15 பெண்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ‘பெண்கள் சக்தி’ விருதை வழங்கி கௌரவித்தாா்.