சத்தி அருள்மிகு பவானிஈஸ்வரர் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையோரம் பழமை வாய்ந்த, பிரசித்திபெற்ற பவானிஈஸ்வரர் திருக்கோவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக கோவிலின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதனையடுத்து சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றுது. இந்நிலையில் இன்று அதிகாலை புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 63 நாயன்மார்கள் சிலைகளும் சேதமடைந்தன.