கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு அனைத்து கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என மக்கள் கூட்டம் அனைத்தையும் மூட உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னையில் துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் நிறைந்த தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள எல்லா கடைகளும் மூடப்பட்டன. இதனால் ரங்கநாதன் தெரு மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.