கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பார்கள் மூடப்படும் என்று கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, பார்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளும் இன்று மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்ட மதுபான பிரியர்கள்.