வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு ஏர் இந்தியா நிறுவனம் துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வந்தடைந்தது. முதல் விமானத்தில் 182 பேரும், இரண்டாவது விமானத்தில் 177 பேரும் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் கரோனா சோதனையை தொடர்ந்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.