ஆயுத பூஜைக்குத் தேவையான பொருள்களை வாங்க பொதுமக்கள் வானகரம் பூ மார்க்கெட்டில் குவிந்ததால், விற்பனை களை கட்டியது.
சென்னை வானகரம் மலா் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து விற்பனையானது.
வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து, தேங்காய், வாழைப்பழம், பழங்கள், பூ மாலை, வாழைக்கன்று, திருஷ்டி பூசனிக்காய், பொரி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தனர்.
தேங்காய், மாவிலை, தோரணைங்களை விற்கும் வகையில், ஏராளமான தற்காலிகக் கடைகள் உருவாகியது.
ஆயுத பூஜை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பழங்கள், பூக்கள், பொரி போன்ற பொருட்கள் வைத்து வழிபடுவது மரபு.
தோரணங்களை வாங்கும் பெண்கள்.
தேங்காய், வாழைப்பழம், பழங்கள், வாழைக்கன்று, பொரி உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்லும் பெண்கள்.
வாடிக்கையாளர்கள் வருகை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கரோனா பொது முடக்கத்தால் எளிய முறையில் கொண்டாடுவதால் வியாபாரம் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.