நேதாஜி பிறந்த நாள்: நாட்டின் வலிமை மிக்க தேசிய வீரர் என பிரதமர் மோடி புகழாஞ்சலி.
ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினத்தை 'பராக்ரம் திவாஸ்' என்று கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளதையடுத்து பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.
ஹைதராபாத்தில் உள்ள எம்.சி.ஆர் - எச்.ஆர்.டி நிறுவனத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.
நாடாளுமன்றத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருகில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சுகதா போஸ் உடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
சுதந்திரப் போராளியான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பெங்களூரு சட்டப்பேரவையில் மலர் அஞ்சலி செலுத்தும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
நாடாளுமன்ற வளாகத்தின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.
நாடாளுமன்ற வளாகத்தின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.
போபாலில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் மாநில பாஜக தலைவர் வி.டி. சர்மா.