சென்னை பரங்கிமலையில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.) 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தற்காப்பு, ஆயுதங்களைக் கையாளுதல், போர் ஒத்திகை, குதிரை ஏற்றம், பள்ளம் தாண்டுதல், மணல் மற்றும் மலையில் ஓடுதல், கயிற்றில் ஏறுதல், தடை தாண்டுதல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நிறைவு விழாவில், பயிற்சி நிறைவு பெற்ற ராணுவ அதிகாரிகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி மெய் சிலிர்க்க வைத்தனர்.
பாராசூட்டில் பறந்து வருவது, ஜிம்னாஸ்டிக் என்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.
பயிற்சி நிறைவு விழாவில்...
கரோனா தொற்று அதிகம் உள்ள காரணமாக பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
மகிழ்ச்சியில்...
தாய்நாட்டை காக்க வரும் இளம் அதிகாரிகள்.
பட்டமளிப்பு விழாவில் ராணுவ அதிகாரிகளாக பதவியேற்றதை கண்டு மகிழ்ந்த பெற்றோர்.