முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த ஆடி கிருத்திகை விழா, தமிழகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களான வடபழனி, கந்தக்கோட்டம், திருப்போரூர், குமரக்கோட்டம், குன்றத்துார் ஆகிய ஆலயங்களில் அதிகாலை முதலே நடைபெற்று வரும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றது. கோயில்களில் குவிந்த பக்தர்கள் ‘அரோகரா அரோகரா’ கோஷத்துடன் முருகனை மனமுருக வழிப்பட்டனர்.