ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின்போது உற்சவர் வீதி உலா செல்லும் போது முன்னும் பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகளை கொண்டு செல்வது வழக்கம். இதையொட்டி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இவை திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தை சென்றடைந்தபின் அவை பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும்.