சென்னைக்கு வட மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் ரயில்களின் வசதிக்காக சென்ட்ரலில் ஒரு முனையமும், தமிழக பகுதிகளுக்கு அதிகளவில் இயக்கப்படும் ரயில்களுக்காக எழும்பூரில் ஒரு முனையமும் தற்போது செயல்படுகிறது. கூடுதல் நெரிசலை சமாளிக்க, ரயில்கள் இயக்குவதற்கு வசதியாக தென் மாவட்டங்களுக்கு 3-வது முனையத்தை, தாம்பரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தாம்பரத்தில் 3-வது ரயில்வே முனையம் அமைக்கும் பணிகள் துவங்கி அதிவேகமாக நடைபெற்று வருகின்றது.