தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராடி வந்த நிலையில், தில்லி ராஜ்பாத் சாலையில் பழனிவேல், ராமலிங்கம், சரவணக்குமார் வாசுதேவன் ஆகியோர் திடீரென முழு நிர்வாணத்துடன் தரையிலும் கைகூப்பியபடி முன்னும் பின்னுமாக தரையில் உருளினர். இந்நிலையில் நிர்வாணப் போராட்டம் நடத்திய மூன்று விவசாயிகளை போலீஸார் சமாதானப்படுத்தி ஆடைகளை அணிய செய்த பிறகு கைது செய்தனர்.