விநாயகர் சதூர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் சிலைகளை கரைக்கும் பணி தொடங்கியது. பட்டினம்பாக்கம், காசிமேடு, நீலாங்கரை, எண்ணூர் ஆகிய இடங்களில் சிலைகளை கரைக்க காவல்துறையினர் அனுமதி வழங்கியது. இந்நிலையில் ராட்சத கிரேன் மூலமாக சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. இதனையொட்டி பாதுகாப்பு பணியில் சென்னை முழுவதும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.