திருமங்கலம் நேரு பூங்கா சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை
கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான முதலாவது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணி முடிவடைந்து கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. சுரங்கப் பாதை ஆய்வு மேற்கொண்ட தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் மெட்ரோ ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த 7.63 கி.மீ., தூரம் வரை உள்ள சுரங்க பாதை வழித்தடத்தில் திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் ஆகிய 6 சுரங்க ரயில் நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.