சென்னையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் சாலையில் நடந்து செல்லும் கல்லூரி மாணவிகள் தலையில் துப்பட்டாவை போர்த்தியவாறு கண்கள் மட்டும் தெரியும் வகையில் முற்றிலும் துணியால் மறைத்து நடந்து செல்கின்றனர். அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.