தொடர்ந்து நான்காவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று 4வது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.