தலைநகர் தில்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டிவிட்டதாக மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளதன் எதிரொலியாக தில்லி உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பாதிப்பானது தில்லியில் மட்டும் அல்லாது பஞ்சாப், ஹரியாணா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசத்தின் மதுராவுக்கு அருகே ஆக்ரா-நொய்டா இடையேயான யமுனா எக்ஸ்பிஸ் சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.