கடந்த ஒரு மாதமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளத்தால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டனர். குறிப்பாக தலைநகர் சென்னையே வெள்ளத்தால் கடந்த வாரம் ஸ்தம்பித்தது. கனமழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் இருந்த குப்பைகள் கடலில் கலப்பதால் கடல் நீர் குப்பை கழிவுகளால் மாசுபட்டு வருகிறது.