தில்லியில் இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி அர்ஜன் சிங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இந்திய விமானப் படையில் 5 ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட ஒரே அதிகாரியாகவும், பின்னர் ஸ்விட்சர்லாந்து மற்றும் வாடிகனுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.