நாட்டின் 69வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார். விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியரசு தின விழாவை பொதுமக்கள் வெகுவாக கண்டுகளித்தனர்.