தெற்கு ரயில்வேயின் பாரம்பரியத்தையும், பழைமையையும் பறைச்சாற்றும் வகையில் உலகின் மிகப்பழமையான நீராவி ரயில் என்ஜின், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்டது. 163 ஆண்டுகள் பழைமையான இந்த ரயில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதாகும். வெறும் 40 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவதால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டது.