வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், மனிதக் குரங்கு, பபூன் குரங்கு போன்ற வெளிநாட்டுக் குரங்கு வகைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குரங்கு வகைகளை அதிகரிக்கும் வகையில் கப்புசின் குரங்கை மைசூர் உயிரியல் பூங்காவில் இருந்து, விலங்குகள் பரிமாற்ற முறைமூலம் வண்டலூர் பூங்காவுக்குப் பெற்றுள்ளனர். இந்த அரியவகை குரங்குகளை பார்த்து மகிழ்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மக்களே.