மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைப்பு
சென்னை அருகே மாதவரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 95 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.