சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பண்பாடு, பாரம்பரியத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் மாணவிகள் பாவாடை, தாவணி, சேலை அணிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். முன்னோர் விட்டுச் சென்ற கலாசாரத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் முயற்சியாகவே இந்த விழா கொண்டாடப்பட்டது.