அமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர், 40க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.