சர்வதேச அளவில் கடலோரப் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளை வலுப்படுத்துவதற்காகப் பல்வேறு நாடுகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடலோரக் காவல்படையினரிடையே உள்ள பல்வேறு உத்திகள், தகவல், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் உதவிகரமாக உள்ளன. இந்நிலையில், முதல் முறையாக அமெரிக்க கடலோரக் காவல் படையினருடன் இணைந்து சென்னைக்கு அருகே நடைபெற்ற இப்பயிற்சியில் அமெரிக்க கடலோரக் காவல்படை ரோந்துக் கப்பலான ஸ்ட்ராட்டன் பங்கேற்றது. இந்திய கடலோரக் காவல்படை ரோந்து கப்பலான சவுரியா, இரண்டு சிறிய கப்பல்கள் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றன.