மேட்டுப்பாளையத்தில் சுற்றுச் சுவர் இடிந்து 17 பேர் பலி
தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற நிலையில், கோவை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நடூர் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்த குரு (45), ராம்நாத் (20), ஆனந்த்குமார் (40), ஹரிசுதா (16), சிவகாமி (45), ஓவியம்மாள் (50), நதியா (30), வைதேகி (20), திலகவதி (50), அருக்கானி (55), ருக்குமணி (40), நிவேதா (18), சின்னம்மாள் (70), அக்ஷயா(7), லோகுராம் (7) உள்ளிட்ட 17 பேர்களின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.