வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடங்கிய தொடர் கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் எழும்பூர், புரசைவாக்கம், அடையாறு, மயிலாப்பூர், கிண்டி, தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.