குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்ற நிலையில் தில்லியில் தடையை மீறி ஜந்தா் மந்தா், மண்டி ஹவுஸ், செங்கோட்டை, ஜாமியா மிலியா உள்ளிட்ட பல இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீஸார், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். தொடர்ந்து வன்முறை வெடித்ததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு மீது தீ வைப்பு போன்ற கலவரங்கள் நடைபெற்றது.