காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர், பலர் கவலைக்கிடமான நிலையில் தொடர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் உலுக்கியுள்ளது.