இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. முதல்வர் பழனிசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றயினர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா போது கிட்டத்தட்ட 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.