சென்னையில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென நேற்று மதியம் சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, தரமணி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. மழை நீரைக் கண்ட சிறுவர்கள், உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர்.