முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள்மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.