முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங்
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, முதல் ரபேல் போர் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விழா பிரான்ஸ் நாட்டின் மெரிக்னாக் நகரில் டசால்ட் விமான நிறுவன மையத்தில் நடைபெற்றது. இதைதொடர்ந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டாலும், 2020-ஆம் ஆண்டு மே மாதம் தான் இந்திய வானில் ரஃபேல் விமானங்கள் பறக்கும் என தெரியவந்துள்ளது. இந்த போர் விமானத்தை ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லும் திறன் கொண்டவை, அதிகபட்சமாக மணிக்கு ஆயிரத்து 389 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை பெற்றது.