10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், தமிழக அரசு அறிவித்தபடி அனைத்து மாணவ, மாணவிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி அளவில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதிப்பெண் சாா்ந்த குறைபாடுகள் ஏதேனும் இருப்பினும் அதுதொடா்பாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இணையதளத்தில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.