வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது செய்தியாளர் சந்திப்பில் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவராக இருந்தபோது, மோதிலால் நேருவின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், நினைவு நாணயங்களை வெளியிட்ட பிரணாப் முகர்ஜி. உடன் சோனியா காந்தி மற்றும் ப. சிதம்பரம்.
குடியரசுத் தலைவராக இருந்தபோது, தமிழக சட்டப்பேரவையின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி. உடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா.
மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியுடன் பிரணாப் முகர்ஜி..
குடியரசுத் தலைவர் மாளிகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜுடன் பிரணாப் முகர்ஜி.
பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி வாழ்த்துத் தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
குடியரசுத் தலைவராக இருந்தபோது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட பிரணாப்.
குடியரசுத் தலைவராக இருந்தபோது, கேரள மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரணாப் முகர்ஜி. உடன் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி.
கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவராக இருந்தபோது தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் பிரணாப் முகர்ஜி. உடன் தமிழக முன்னாள் ஆளுநர் கே. ரோசையா.
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது வங்க நாவலைப் படித்துக் கொண்டு ஏர் இந்தியா விமானத்தில் நியூ யார்க்கிற்கு பயணம் செய்த பிரணாப் முகர்ஜி.
புதுதில்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் சோனியாவுடன் ஆலோசனையில் பிரணாப்.
மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, சிறந்த மாநிலத்துக்கான விருதை ஹிமாசலப் பிரதேச முதல்வர் பிரேம் குமாரிடம் வழங்கும் பிரணாப் முகர்ஜி.